ட்விட்டர் நிறுவனத்தின் புதிய கொள்கை மற்றும் நெறிமுறைகளின்படி, தொடர்ந்து 6 மாதக்காலம் பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை நிரந்தரமாக முடக்கவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
செயலற்ற லட்சக்கணக்கான கணக்குகளை முடக்குவதன் மூலம், ட்விட்டரை தொடர்ச்சியாக பயன்படுத்துவோருக்கான சேவைகளில் கூடுதல் கவனத்தைச் செலுத்தலாம் என ட்விட்டர் கருதுகிறது.
இதனால் டிசம்பர் 11ஆம் தேதியிலிருந்து செயலற்ற கணக்குகளை அந்நிறுவனம் முடக்கவுள்ளது. முடக்க நடவடிக்கைக்கு முன்பாக சம்பந்தப்பட்ட பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.